Anna serial: ஸ்கூல் வாங்க காசு இல்ல... பணத்தை ரெடி பண்ண ஷண்முகத்துக்கு வந்த புது ஐடியா - அண்ணா சீரியல் அப்டேட்

First Published May 5, 2024, 4:00 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் சூழ்ச்சியை முறியடிக்க வீரா என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் சூழ்ச்சியை முறியடிக்க வீரா என்ட்ரி கொடுத்து சிலம்பாட்டம் ஆட தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, முதல் ரவுண்டில் வீரா அடி வாங்க, சௌந்தரபாண்டியும் முத்துபாண்டியும் சந்தோசப்பட்டு சிரிக்க, அடுத்த ரவுண்ட் தொடங்குகிறது, இந்த ரவுண்டியில் யார் முதலில் எதிரில் இருப்பவர் நெற்றியில் பொட்டு வைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று சொல்கின்றனர். 

Zee Tamil Anna serial

இதனை தொடர்ந்து வீரா, ருத்ராவை வெளுத்தெடுத்து அவளது நெற்றியில் பொட்டை வைத்து போட்டியில் ஜெயித்து காட்ட, எல்லாரும் வீராவை கொண்டாடுகின்றனர், மேடையில் கலெக்டர் இருந்தும் சௌந்தரபாண்டி கையால் தான் பரிசை வாங்குவேன் என்று சொல்லி பரிசு தொகையை வாங்கி கொள்ள, ஷண்முகம் என்னவெல்லாம் பேசுனீங்க என்று அவர்களை கலாய்த்து விட்டு வீட்டிற்கு வருகிறான். வீட்டிற்கு வந்து பார்க்க பரணி இருக்க அனைவரும் ஷாக்காகின்றனர். 

இதையும் படியுங்கள்... கார்த்திகை தீபம் சீரியல் : வில்லியாக மிரட்டும் லேடி ஹிட்லர் ரம்யாவை கில்லி மாதிரி எதிர்கொள்வாரா கார்த்திக்?

Anna serial Update

அவர் தான் வேணும்னே உங்களை வம்பிழுக்கிறாரு, நீயும் போவியா என்று திட்ட, ஷண்முகம் வீரா ஜெயித்த விஷயத்தை சொல்லி சமாதானம் செய்கிறான். அடுத்து இரவில் தூங்கி கொண்டிருக்கும் போது ஷண்முகத்திற்கு கோவிலில் மாற்றுதிறனாளி ஒருவரை சந்தித்தது, அதன் பிறகு பழனிக்கு போக ஒரு அம்மா உதவி கேட்டது, கும்பாபிஷேகம் நடத்த உண்டியல் வைத்தது போன்ற விஷயங்கள் வந்து வந்து போக, ஷண்முகத்திற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது. 

Anna serial twist

உடனே ரத்னாவை எழுப்பி உன் ஸ்கூலில் படிக்கிற பசங்களோட அப்பா அம்மாவை நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லு என்று சொல்ல, ரத்னா காரணம் கேட்க, நீ எல்லாருக்கும் சொல்லு, எதுக்குன்னு நாளைக்கு சொல்றேன் என்று சொல்கிறான். மறுநாள் எல்லாரும் கோவிலில் ஒன்று கூடுகின்றனர். அப்போது உடன்குடி ஒரு உண்டியலை கொண்டு வந்து வைக்க, ஷண்முகம் இந்த ஸ்கூல்ல தான் உங்க வீட்டு பிள்ளைங்க எல்லாம் படிக்குதுங்க. இந்த இடத்தை வாங்கி ஒயின் ஷாப்பா மாத்த பிளான் போடுறாரு சௌந்தரபாண்டி. அதனால் இந்த இடத்தை வாங்க உங்களால் முடிந்த பணத்தையோ நகையையோ போடுங்க, நாளைக்கு வரைக்கும் இந்த உண்டியல் இங்க இருக்கும் என்று சொல்ல, வைகுண்டம் இதெல்லாம் நடக்குற விஷயமா என்று சொல்ல, ஷண்முகம் அவரை அடிக்க துரத்துகிறான். 

Anna serial Today Episode

மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்து பார்க்க அங்கு ஒருத்தனும் இல்லாமல் இருக்க ஷண்முகம் வருத்தம் அடைகிறான். கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் படிக்கும் பெண் அம்மாவுடன் வந்து நகையையும் பணத்தையும் போட்டுட்டு போக, ஊர் காரர்கள் எல்லாரும் போட தொடங்குகின்றனர், இதனால் ஷண்முகம் மனதுக்குள் ஸ்கூலை வாங்கி விடலாம் என்ற சந்தோசம் தோன்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் தான் வேணும்... பிடிவாதத்தால் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

click me!