அதாவது, ஷண்முகம் குடும்பத்தினர் கோவிலுக்கு வருவதை பார்த்து இசக்கி சந்தோசப்பட்டு அண்ணனிடம் மன்னிப்பு கேட்க கிளம்ப பாக்கியம் கொஞ்சம் பொறுமையா இரு என்று தடுத்து நிறுத்துகிறாள்.
இதனை தொடர்ந்து இதே கோவிலுக்கு ஷண்முகம் குடும்பம் வந்து சாமி கும்பிடுவதை பார்த்து விடுகிறார். அதோடு பாக்கியமும் வைகுண்டமும் சந்தித்து கொண்டு நான் சொன்ன மாதிரி கூப்பிட்டு வந்துட்டேன், இனிமே இந்த தாலி பிரிச்சி போடுற விஷயம் நல்லபடியா நடக்கணும் என்று பேசி கொள்ள சௌந்தரபாண்டி இதையும் கேட்டு விடுகிறார்.
இதனையடுத்து அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை சேர்த்து வைக்க பிளான் போடுறீங்களா? இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தறீங்கன்னு பார்க்குறேன் என்று மனதில் நினைத்து கொண்டு முத்துப்பாண்டி பாண்டியம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவர்களும் கடுப்பாகின்றனர். பிறகு சௌந்தரபாண்டி அடுத்து நாம என்ன செய்யணும் என்பதை ரகசியமாக சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்