Anna Serial : சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

First Published Apr 7, 2024, 5:38 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் உடன்குடி சொன்னதை கேட்டு லாட்ஜில் தங்கியிருக்கும் மீனாட்சி குடும்பத்தை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் உடன்குடி சொன்னதை கேட்டு லாட்ஜில் தங்கியிருக்கும் மீனாட்சி குடும்பத்தை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, இங்கே சௌந்தரபாண்டி மீனாட்சியை சந்தித்து கேஸ் போட்டு டி என் ஏ டெஸ்ட் எடுத்து கனி உங்க பொண்ணு தான் என்பதை நிரூபித்து கூட்டி போங்க, ஆனால் உங்க பொண்ணை உஷாரா பார்த்துக்கோங்க என்று பேசி கொண்டிருக்க ஓடோடி வரும் சனியன் ஷண்முகம் வரும் விஷயத்தை சொல்ல சௌந்தரபாண்டியும் சனியனும் மறைந்து கொள்கின்றனர். 

Zee Tamil Anna serial

இதனையடுத்து பரணி மீனாட்சியை சந்தித்து இங்க இருக்காதீங்க, கனியை பார்க்க வராதீங்க என்று பேச நான் என் பொண்ணு இல்லாமல் ஊருக்கு போக மாட்டேன் என்று மீனாட்சி சொல்ல பரணி இதையெல்லாம் யார் உங்கள பண்ண சொல்றாரு எனக்கு நல்லாவே தெரியும், எங்க அப்பா சௌந்தரபாண்டி தான் சண்முகத்தின் மீது இருக்கும் பகையில் இப்படி பண்ணிட்டு இருக்காரு என்று கிழித்தெடுக்க இதை பார்த்து சனியன் சிரிக்க சௌந்தரபாண்டி அவரை அடி வெளுத்தெடுக்கிறார். 

இதையும் படியுங்கள்... அபிராமியை நைட்டோடு நைட்டாக கடத்த நடக்கும் பிளான்... கார்த்திகை தீபம் சீரியலில் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்

Anna Serial Update

அடுத்து பரணி கனி உங்க கூட வரமாட்டா என்று சொல்ல மீனாட்சி தன்னுடைய தாய் பாசத்தை சொல்லி புரிய வைக்க பரணி 13 வருஷமாக வளர்த்த சண்முகத்தை நினைத்து பாருங்க. அவளுக்கு எல்லாமே அவ அண்ணன் ஷண்முகம் தான் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள். பிறகு மீனாட்சி நைட் நேரத்தில் ஷண்முகம் வீட்டருகே வந்து கனிக்கு பாடிய தாலாட்டு பாடலை பாட தூக்கத்தில் இருந்த கனி அந்த பாட்டை கேட்டு எழுந்து கொள்கிறாள். 

Anna Serial Today Episode

மறுநாள் கனி அதே பாட்டை முணுமுணுக்க அதை பார்த்து ஷண்முகம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறான். பரணி கனியை தனியாக அழைத்து சென்று இந்த பாட்டை எதுக்கு பாடுற? இதை பாடத்தை என்று எடுத்து சொல்ல கனி எனக்கு என்னமோ அந்த பாட்டை பாடணும் போல் இருக்கு, அந்த பாட்டை எங்கயோ எப்பயோ கேட்ட மாதிரியே இருக்கு என்று சொல்கிறாள். பரணி இந்த பாட்டை பாடாத என்று சொல்லி புரிய வைத்து வெளியே வர இவர்கள் பேசியதை ஷண்முகம் கேட்ட வருத்தப்பட்டு நிற்கிறான். 

ரூமுக்குள் இருக்கும் கனி மீண்டும் இதே பாட்டை பாட வைகுண்டம் கோபமாக உள்ளே போக ஷண்முகம் தடுத்து நிறுத்தி அவளுக்குள்ளவே அந்த பாட்டு இருக்கு, அவள் மேல எந்த தப்பும் இல்ல. எதுவும் சொல்ல வேண்டாம் விட்டுடுங்க என்று சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Rajinikanth : வேட்டையன் பராக்.. ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170" - ரிலீஸ் எப்போது? Lyca கொடுத்த மாஸ் அப்டேட்!

click me!