Yashika Aannand: நடிப்பை தொடர்ந்து புதிய தொழிலில் இறங்கும் யாஷிகா ஆனந்த்! உதவ முன்வந்த எஸ்.ஜே.சூர்யா!

First Published Feb 22, 2024, 1:57 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த், நடிப்பை தொடர்ந்து, திரையுலகில் மிகவும் ரிஸ்க் அதிகமான தொழிலை கையில் எடுக்க உள்ளார். தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 

தமிழ் சினிமாவில் இன்று ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த், 13 வயதிலேயே திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'இனிமே இப்படித்தான்' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் கூட, ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.

எனவே 2016 ஆம் ஆண்டு யாஷிகா நடிப்பில் வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படமே இவரது முதல் படமாக மாறியது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், அடுத்தடுத்து'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'மணியார் குடும்பம்', 'கழுகு 2', 'ஜாம்பி', 'மூக்குத்தி அம்மன்', 'தி லெஜன்ட்', என பல படங்களில் நடித்தார்.

Raashii Khanna: சகோதரன் திருமணத்தில் ஆட்டம்... பாட்டம்.. என கொண்டாடத்தால் களைகட்ட வைத்த நடிகை ராஷி கண்ணா!

குறிப்பாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்ததால், அடல்ட் பட நாயகி என முத்திரை குத்தப்பட்டது. இந்த பெயரை மாற்றுவதற்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய யாஷிகா, வெற்றிபெறும் வாய்ப்பு இருந்த போதும்.. ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஓவர் ஜால்றா அடித்ததால், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி சில வாரங்களில் வெளியேறினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி யாஷிகாவுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்த போதிலும்.. யாஷிகா விபத்தில் சிக்கியதால், இவர் கமிட் ஆகி இருந்த பல படவாய்ப்புகள் இவரின் கைகளை விட்டு நழுவியது. விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்... தற்போது அதிரடியாக புதிய தொழிலில் கால் பதித்துள்ளார்.

மகனை கதாநாயகனாக்கும் இயக்குனர் முத்தையா! ஆரவாரத்தோடு பூஜை போட்டு துவங்கியது படப்பிடிப்பு!

அதாவது யாஷிகா ஆனந்த் திரையுலகில் தயாரிப்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு யாஷிகாவுக்கு உதவ உள்ளார். தயாரிப்பாளராக அறிமுகமான பல நடிகைகள்... பணத்தை இழந்துள்ள நிலையில், யாஷிகாவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் சிலர் அட்வைஸ் கூறி.. தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!