தமிழ் சினிமாவில் இன்று ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த், 13 வயதிலேயே திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'இனிமே இப்படித்தான்' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் கூட, ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.
குறிப்பாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்ததால், அடல்ட் பட நாயகி என முத்திரை குத்தப்பட்டது. இந்த பெயரை மாற்றுவதற்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய யாஷிகா, வெற்றிபெறும் வாய்ப்பு இருந்த போதும்.. ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஓவர் ஜால்றா அடித்ததால், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி சில வாரங்களில் வெளியேறினார்.
அதாவது யாஷிகா ஆனந்த் திரையுலகில் தயாரிப்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு யாஷிகாவுக்கு உதவ உள்ளார். தயாரிப்பாளராக அறிமுகமான பல நடிகைகள்... பணத்தை இழந்துள்ள நிலையில், யாஷிகாவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் சிலர் அட்வைஸ் கூறி.. தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.