சம்மரில் சில் பண்ணும் நடிகை வசுந்தரா காஷ்யப்.. க்யூட் போட்டோஸ் இதோ..

First Published May 10, 2024, 5:07 PM IST

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வசுந்தரா காஷ்யப் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ் தந்தைக்கும் மகாராஷ்டிரா தாய்க்கும் பிறந்த வசுந்தரா காஷ்யப் பிரபல நடிகையும் மாடலும் ஆவார். 2006-ம் ஆண்டு வெளியான வட்டாரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து உன்னாலே உன்னாலே படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்த இவர், காலை பணி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

பின்னர் 2009-ம் ஆண்டு ஜெயம் ரவியின் பேரண்மை படத்தில் கல்பனா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்ட வசுந்தரா மிஸ் கிரியேட்டிவிட்டி பட்டம் வென்றார். பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது தனது பெயரை வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக்கொண்டார். இந்த படத்திற்கு முன்பு வரை இவரின் பெயர் அதிசயா என்று இருந்தது. 

இதை தொடர்ந்து போராளி, சித்திரையில் நிலாச்சோறு, கண்னே கலைமானே, பக்ரித், கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்த கோடையில் பழங்கள், ஜூஸ் சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

click me!