தென்னிந்திய திரையுலகில் மிகவும் தைரியமான நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா. சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து... பல ஏமாற்றங்கள், சவால்கள், போராட்டங்களை கடந்து சினிமாவில் நடிகையாக மாறியவர்.
ஹீரோவாக இந்த படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார், நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா அறிமுகமானார். முதல் படத்திலேயே இந்த ஜோடி ரசிகர்களின் ஃபேவரட்டாக மாறியது. மேலும் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இப்படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. பல வருடங்களாக தன்னுடைய காதலை ஒரு புதையல் போல் பொத்தி பொத்தி பாதுகாத்த சமந்தா, முன்னணி நடிகையாக மாறி, திருமணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் வெளிப்படுத்தினார்.
இந்த நட்சத்திர ஜோடியின் திருமண வாழ்க்கை, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆசீர்வாதத்தோடும், வாழ்த்துக்களோடும், துவங்கிய போதும்... இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த திருமண வாழ்க்கையை நான்கே வருடத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது. இருவருமே பரஸ்பரமாக பிரிவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
தென்னிந்திய மொழி படங்களை விட, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் சமந்தா, அதற்க்கு ஏற்றாப்போல் தற்போது ஸ்டன்னிங் கவர்ச்சியில் Femina India புத்தகத்தின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்... சமந்தா ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சி விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.