Chandramukhi
கேரளாவில் பிறந்த நடிகை நயன்தாரா, துவக்கத்தில் மலையாள மொழி டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பிறகு மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.
அதன் பிறகு தனது இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்ற நயன்தாரா, இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக தமிழில் அன்னபூரணி என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
Ajith: கடைசி நேரத்தில் முட்டிக்கிச்சு! அஜித் நடிக்க வேண்டிய ஹிட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகர் பிரஷாந்த்.!
Prabhas
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் உருவாக உள்ள "கண்ணப்பா" என்கின்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. மேலும் அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் கடவுள் சிவனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
Akshay Kumar
ஆனால் இப்பொது பிரபாஸ் அந்த திரைப்படத்தில் சிவனாக நடிக்கவில்லை என்றும், அவருக்கு மாற்றாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் அந்த திரைப்படத்தில் சிவனாக நடிக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் அக்ஷய் குமாரின் வருகையால் அந்த திரைப்படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.