கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த கனகலதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நோயில் இருந்து மீள்வதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் கனகலதா.
நடிகை கனகலதா தமிழிலும் சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த இருட்டு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை வி இசட் துரை இயக்கினார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கனகலதா அதன்பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இதனிடையே பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த கனகலதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 63.