Vivek: நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்! மரங்கள் நட்டு அஞ்சலி செலுத்திய நடிகர் வைபவ்..!

First Published Apr 17, 2024, 6:14 PM IST

நடிகர் விவேக் உயிரிழந்து இன்றுடன் மூன்றாவது வருடம் நிறைவடைவதை முன்னிட்டு அவரின் நினைவாக மரம் நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் வைபவ்.
 

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். தன்னுடைய காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர். இதன் காரணமாகவே இவரை சின்ன கலைவாணர் என பல ரசிகர்கள் அழைப்பது உண்டு.

சினிமாவில் கால் பதித்த நாள் முதல், எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல்... முடிந்த வரை பிறருக்கு உதவும் குணமுடன் வாழ்ந்த, நடிகர் விவேக் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்! சர்ச்சைக்கு குறித்து முதல் முறையாக பேசிய இந்திராஜா கணவர் கார்த்தி

நடிகர் விவேக்கின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்தது. இந்த மண்ணை விட்டு விவேக் மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய காமெடி மூலமும், அவர்  நட்டு சென்ற மரங்கள் மூலமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விவேக் மறைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவருக்கு நடிகர் வைபவ் படக்குழுவினருடன் இணைந்து மரம் நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!

நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.  நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு  நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!

click me!