நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைடரியும் மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றியபோது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி, பின்னர் விஷயம் வெளியில் லீக் ஆனதால் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் பின்னர் இவர்களிடம் அதிகம் கேட்கப்பட்டு வந்த கேள்வி உங்களுக்கு திருமணம் எப்போது என்பது தான்.
முதலில் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக நடந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் சீக்ரெட்டாக நிச்சயம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் சீக்ரெட்டாக செய்துகொள்ளவில்லை பிரைவேட்டாக செய்துகொண்டோம். நாங்கள் அழைக்காதவர்கள் அதனை சீக்ரெட் என சொல்கிறார்கள். அழைத்தவர்களுக்கு அது பிரைவேட்டான விழா என்பது தெரியும் என நடிகர் சித்தார்த் கூறினார்.
தொடர்ந்து திருமணம் எப்போது என்பது குறித்து பதிலளித்த சித்தார்த், திருமணம் எப்போது என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தான் முடிவு செய்வார்கள். நான் முடிவு செய்வதற்கு இது ஒன்றும் ஷூட்டிங் தேதி அல்ல, இது வாழ்நாள் முழுக்க கொண்டாடும் ஒரு தினம். அது சரியான நேரத்தில் நடக்கும், அதை அவர்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார். அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Gopinath : 13 கிலோ துணி மூட்டையோடு தெரு தெருவா திரிஞ்சேன்... நீயா நானாவில் கோபிநாத்தை கண்கலங்க வைத்த தருணம்