கோலிவுட் திரையுலகில், உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித் , 2007 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் வரை... தொழில்நுட்ப ரீதியாக அவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.
அஜித் குமாருக்கு எம்.எஸ்.பாஸ்கர், விக்ரம் போன்ற கலைஞர்கள் டப்பிங் செய்துள்ளனர். அதே போல் பின்னணி பாடகர் SPB சரண், அஜித்தின் வகுப்புத் தோழன் ஆவர். SPB பரிந்துரை செய்தே இவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் சரியாக வரி செலுத்துபவர்களில் அஜித்தும் ஒருவர். ப்ளாக் மணி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, திரைப்படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை செக் மூலமாகவே பெறுகிறார். 2011-ஆம் ஆண்டு 'மங்காத்தா' படத்தில் இருந்து இந்த கொள்கையை அஜித் பின்பற்றி வருகிறார்.
Ajith
அஜித் நடிக்க துவங்கிய ஆரம்ப நாட்களில், அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகும் குணம் உடையவராக இருந்தார். தன்னை சார்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். ஆனால் திருமணத்திற்கு பின், பத்திரிகையாளர்களால் இவர் சந்தித்த பிரச்சனை... இனி மீடியா முன் பேச கூடாது என்கிற கடினமான முடிவை எடுக்க வைத்தது.
அஜித் பொதுவாக தன்னுடைய படங்களின் வெற்றி தோல்வி குறித்து அதிகம் கவலை பட மாட்டார். ஆனால் பில்லா 2 மற்றும் அசால் சரியாக வரவில்லை என்கிற தகவல் அவரை மிகவும் கவலைப்பட செய்தது. அசல் தோல்வி படம் என்றாலும், பில்லா 2 தற்போது வரை அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
அஜித் சாய் பாபாவின் தீவிர பக்தர் ஆவர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய் பாபாவை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் ஷீரடிக்கு அவ்வப்போது செல்வத்தையும் கடைபிடித்து வருகிறார்.