Central Railway Station
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு ஊா்களிலிருந்து சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் தற்போது செய்யப்பட்டுள்ளது.
Chennai Central
தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Express Train Service
சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும். மேலும், நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது.