ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. முழு விபரம் இதோ!

First Published Apr 2, 2024, 8:55 AM IST

பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Central Railway Station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு ஊா்களிலிருந்து சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் தற்போது செய்யப்பட்டுள்ளது.

Chennai Central

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Express Train Service

சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும். மேலும், நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது.

Southern Railway

சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிகவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வர வேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!