அதேபோல் தமிழ் திரையுலகில் நடிகர் சீயான் விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் வழங்கி இருந்தார்கள். நடிகை நயன்தாராவும் தன் பங்கிற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்திருந்தார். கோலிவுட்டை போல் டோலிவுட்டில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் வரிசையாக நிவாரண நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.