Published : Sep 27, 2022, 08:45 PM ISTUpdated : Sep 27, 2022, 08:47 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' சீரியல் நாயகன் அர்ணவ், 'செவ்வந்தி' சீரியல் நடிகையை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், திவ்யா கர்ப்பமான பின் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா.
25
இந்த சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில்... ஒரு நிலையில் காதலிக்க தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்துள்ளனர்.
அர்ணவ் முஸ்லீம் என்பதால் இவர்களின் திருமணம், முஸ்லீம் மற்றும் இந்து முறைப்படி நடந்துள்ளது. திருமணம் நடந்த போது, இது குறித்து வெளியே சொல்லாத இந்த ஜோடி, கர்ப்பமான பின்னர் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார்கள்.
45
இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு ஒரு பக்கம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்.. 'செவ்வந்தி' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செல்லமா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.