பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வருவது உடன் தொடங்கியுள்ளது. பாண்டியனை பார்த்ததும் போட்ட கோலத்தை கூட அரைகுறையாக விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் கோமதி. கணவரை கண்டதுமே கோமதி கதறி அழ, எல்லா தப்பும் நான் தான் செய்தேன். நீங்கள் எதற்கு வீட்டை விட்டு போனீங்க என்று கேட்கிறார்.
24
கணவரை சமாதானம் செய்யும் கோமதி:
எங்க இருந்தார் என்று மகன்களிடம் கேட்கவே, அதற்கு பழனிவேல் கடையில் இருந்தார். கடையில் குடோனில் இருந்தார் என்று கூறினார். என்னால் தான் எல்லா பிரச்சனையும், இனிமேல் நீங்கள் எங்கும் போகாதீர்கள் என்று கணவரை கோமதி சமாதானம் செய்தார். அதன் பிறகு சரவணன் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனை எதாவது செய்ய வேண்டும் என்று சரவணன் துடிக்கிறார். கதிரும் அதற்கேற்ப ஆதங்கப்படுகிறார்.
செந்திலும் ரெடியாகவே இருக்கிறார். அதற்கு பழனிவேல் மாப்பிளைங்கிளா நீங்கள் எல்லோருமே சும்மா இருங்க. இப்போது தான் வீட்டுக்கே சென்று அடிச்சு வெளுத்திருக்கிறோம். இது அரசியோட விஷயம் எதையும் பொறுமையாகத்தான் டீல் பண்ண வேண்டும் என்று கூறுகிறார். இனிமேல் அவன் அரசி விசயத்தில் தலையிட மாட்டான் என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
44
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:
இறுதியாக பாண்டியன் தனது மகள் அரசி விஷயத்தில் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதைப் பற்றி கோமதியிடம் பேசினார். அதற்கு கோமதி நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான் என்று கூறினார். கடைசியில் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அரசி அப்பா என்று பாண்டியனை கூப்பிட அதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிவடைகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.