மொத்தம் 5 வீடியோக்கள்.! எல்லாம் முடிச்சுட்டு எஸ்கேப் ஆன விஜய் tv புகழ் நாஞ்சில் விஜயன்.! குமுறும் திருநங்கை

Published : Sep 12, 2025, 12:31 PM IST

Nanjil Vijayan: நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை வைஷு என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

PREV
14
நாஞ்சில் விஜயன்

விஜய் டிவியில் ஸ்டாண்ட் ஆப் காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, அடுத்தடுத்து பல மேடை நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். நாஞ்சில் விஜயன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்கு 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

24
திருநங்கை வைஷு

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை வைஷு என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி வேலையை முடித்து விட்டு தற்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

34
நாஞ்சில் விஜயன்

இந்த விவகாரம் குறித்து வைஷு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், நாஞ்சில் விஜயன் திருமணத்திற்குப் பிறகும் இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார். நியூ இயர் அன்று கூட நாங்கள் இருவரும் தான் பாண்டிச்சேரியில் ஒன்றாக இருந்தோம். இரவு முழுக்க அவர் என்னுடன் தான் இருந்தார். நாஞ்சில் விஜயனுக்குக் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தன்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார். நாஞ்சில் விஜயன் மனைவிக்கு எனக்கும் இருக்கும் உறவு எல்லாம் தெரியும். தெரிந்துதான் அவர் திருமணம் செய்து கொண்டார். நாஞ்சில் விஜயனின் விஷேச நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் இருப்பேன்.

44
திருநங்கை

தனது காதலை முதலில் அவரிடம் தெரிவித்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டபோது, தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், அவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் அனுமதி அளித்ததாக வைஷு கூறினார். நான் திருநங்கை என்பது இப்போதுதான் அவருக்குத் தெரிந்ததா? நாங்கள் பல நாட்கள் ஒரே ரூமில் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். அப்போது நான் திருநங்கை என்பது அவருக்குத் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories