தமிழில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்து, கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன, 'மனதை திருடிவிட்டாய்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் நாராயணமூர்த்தி. இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற போதும், வசூல் ரீதியாக வெற்றிபெற தவறிவிட்டது. அதே சமயம் இப்படத்தில், மறைந்த காமெடி நடிகர் விவேக் மற்றும் வடிவேலுவின் காமெடி அதிக அளவில் பேசப்பட்டது.