அன்பைப் பொழிந்த மகன்... ‘ஆனந்த யாழை’ பாட்டை போட்டு ஃபீல் பண்ணிய விக்கி

First Published Oct 16, 2022, 6:35 PM IST

தனது பிள்ளை தன் மீது சிறுநீர் கழித்த அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர் தனது கனவு நனவாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஆகிய நான்கு மாதங்களில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களானது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வந்தது .ஏழு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

நானும் ரவுடிதான் படதத்தளத்தில் உருவான காதல் சமீபத்தில் மகாபலிபுரத்தில் போடப்பட்ட பிரம்மாண்ட மணவறையில்  திருமணமாக முடிந்தது. இவர்களது விழாவிற்கு சூப்பர் ஸ்டார்கள் வருகை தந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு... Sameera Reddy : பாத் டப்பில் நுரையுடன் சமீரா ரெட்டி...பழைய ஃபாமுக்கு திரும்பிட்டாரே!

இதை தொடர்ந்து ஹனிமூன் சென்ற இவர்களது புகைப்படங்களும் வைரலாகின. இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் பெற்றோர்களாகி விட்டதை  இன்ஸ்ட்டா மூலம் தெரிவித்திருந்தனர். குழந்தைகளின் பாதங்களை பதிவிட்டு தாங்கள் பெற்றோர்களாகி விட்டோம் என தெரிவித்திருந்தனர். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளது. அதாவது திருமணமாகி 5 ஆண்டுகளாகி இருக்க வேண்டும்.  இருவரில் ஒருவருக்கு கட்டாயம் குழந்தை பேறு இருக்கக்கூடாது. வாடகை தாய்க்கு  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருக்கையில் திருமணமாகி நான்கே மாதங்களில் இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தது கண்டனத்திற்கு உள்ளானது.

மேலும் செய்திகளுக்கு...chiyaan 61 update : வெளியூர் புறப்படும் சீயான் 61 டீம்.. ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா?

vignesh shivan

இது குறித்து தமிழக அரசு விசாரணை குழு ஒன்றையும் அமைத்தது. இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் தனது பிள்ளை தன் மீது சிறுநீர் கழித்த அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர் தனது கனவு நனவாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

click me!