அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் 5 போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா!

Published : Jan 10, 2025, 08:32 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்டு 95 நாட்களுக்கு மேல் விளையாடி, இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்த விசித்ரா, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்பதை அறிவித்துள்ளார்.  

PREV
14
அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் 5 போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா!
Bigg boss Tamil season 8

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்சியில் யாரும் எதிர்பாராத போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் விசித்ரா. பைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், 98-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவரை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்,  பிரபல நடிகர் ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், அதற்க்கு நான் உடன்படாததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலரை ஏவி என்னை அடித்ததாக இவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

24
Bigg Boss Season 7 Contestant Vichithra

அந்த நேரத்தில் தன்னை பாதுகாத்தது தன்னுடைய கணவர்தான் என்றும் ஒவ்வொரு நாளும் ஹோட்டல் ஒவ்வொரு அறையில் தன்னை தங்க வைத்தார் என விசித்ரா பேசி இருந்தார்.

அதேபோல் தன்னுடைய கருத்தை நேரடியாக தெரிவிக்கும் ஒரு போட்டியாளராகவும், விசித்ரா பார்க்க பட்டார். பொதுவாக 50 வயதை கடந்த நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், ஓரிரு வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்ரா சுமார் 98 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடினார்.

எனக்கு கார் ரேஸ் தான் முக்கியம்; சினிமாவை விட்டு விலகுவதாக அஜித் அறிவிப்பு!
 

34
Pavithra and Rayan

இந்நிலையில் விசித்ரா தற்போது, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும்,  இறுதி போட்டியாளர்களாக இருக்கும் 8 போட்டியாளர்களின் டாப் 5 கண்டஸ்டண்ட்ஸ் யார் யார் என்பதை தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் 5-ஆவது இடத்தை பவித்ராவுக்கு கொடுத்துள்ளார் விசித்ரா. அவர் அமைதியாகவும், சூழலை லாவகமாக கையாண்டு விளையாடுகிறார் என கூறியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக முதல் பைனல் லிஸ்ட்டாக இருக்கும் ரயானுக்கு கொடுத்துள்ளார். ரயான் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டை விளையாடி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்றும் கூறியுள்ளார்.
 

44
Vichithra Listed Top 5 Contestants

மூன்றாவது இடத்தை ஜாக்குலினுக்கு கொடுத்துள்ளார். எப்படிப்பட்ட சவால்களையும் நேரடியாக அவர் சந்திப்பதாக விசித்ரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.  இரண்டாவது இடத்தை முத்துக்குமரனுக்கு கொடுத்துள்ளார். அவரின் விளையாட்டு கவனம் ஈர்த்து வருவதாகவும், மிகவும் தெளிவான மனிதர் என குறிப்பிட்டுள்ளார். அதை போல் முதலிடத்தை தீபக்குக்கு கொடுத்துள்ளார். தீபக் கடினமான சூழலையும் மிகவும் சாமர்த்தியமாக கையாள்கிறார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சௌந்தர்யா, விஜே விஷால், அருண் பிரசாத் போன்றவர்களுக்கு இந்த லிஸ்டில் விசித்ரா இடம் கொடுக்காததால், அவர்களுக்கு தகுதியே இல்லையா என, அவர்களின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என் EX காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்; விஷால் காதில் சொன்னது இது தான்! அன்ஷிதா ஓபன் டாக்!
 

Read more Photos on
click me!

Recommended Stories