ஒரு முறை இளையராஜா தன்னிடம் சில டியூன்கள் இருப்பதாகவும், அதற்கு ஒரு கதையை அமைப்பவர்களுக்கு அதை கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஓபன் சேலஞ்ச் ஒன்றை அறிவித்தார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள முன்னணி இயக்குனர்களே தயங்கிய நிலையில், அதை அசாதாரணமாக ஏற்றுக்கொண்டு, இளையராஜாவின் 6 மெட்டுக்களுக்கு ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி திரைப்படமாக மாற்றினார் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்.
அந்த திரைப்படம் தான் கடந்த 1986ம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்தின் "வைதேகி காத்திருந்தாள்" என்ற படம். கேப்டன் விஜயகாந்த், மைக் மோகன் என்று இந்த இரு நடிகர்களுக்கு தான் அதிக அளவில் படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்ராஜன். தளபதி விஜயின் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தை இயக்கியதும் இவர் தான்.
அரண்மனை 4 முதல் தங்கலான் வரை - 2024ல் 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்த படங்கள்!