தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் வடே ரமேஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் ஜெயசுதா. இதையடுத்து நிதின் கபூர் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டார் ஜெயசுதா.
இதனிடையே நடிகை ஜெயசுதா, மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் ஒன்று பரவி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு காரணம் அவர் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்த வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் வந்து கலந்துகொண்டார். அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவி வந்தது.