தீ விபத்தில் சிக்கிய 'வனத்தைப்போல' சீரியல்' நடிகர் ஸ்ரீகுமார்.! கார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பிரபலம்!

Published : Apr 02, 2023, 03:35 PM ISTUpdated : Apr 02, 2023, 03:36 PM IST

சன் டிவி 'வானத்தைப்போல' சீரியலில் நடித்து வரும் இரண்டு பிரபலங்கள் அடுத்தடுத்து வெவ்வேறு விபத்துகளில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

PREV
17
தீ விபத்தில் சிக்கிய 'வனத்தைப்போல' சீரியல்' நடிகர் ஸ்ரீகுமார்.! கார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பிரபலம்!

சமீப காலமாகவே, சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதில் நடித்து வரும் நடிகர்களுக்கும், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப்போல.

27

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், அண்ணன் - தங்கைகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், முதலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் என்பவர் நடித்து வந்தார். மேலும் துளசி என்கிற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர் நடித்து வந்தார் .இவர்கள் இருவருமே கடந்த ஆண்டு அடுத்தடுத்து இந்த சீரியலில் விட்டு விலகிய நிலையில், இவர்களுக்கு பதிலாக இரண்டு புது நடிகர்கள் உள்ளே வந்தனர்.

புதிய தொழில் தொடங்கிய இயக்குனர் ஹரி - ப்ரீத்தா தம்பதி.! திறந்து வைத்து வாழ்த்திய நடிகர் சூர்யா! வைரல் போட்டோஸ்

37

தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமாரும், துளசி கதாபாத்திரத்தில் மான்யா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். எப்படி தமன் மற்றும் ஸ்வேதா ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைத்ததோ, அதேபோல் இவர்கள் இருவரின் நடிப்பும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

47

 சின்ராசுவின் குடும்ப பிரச்சனை இப்போது ஒரு வழியாக தீர்ந்து வந்தாலும், எப்போது துளசி உண்மையாக கர்ப்பமாக இல்லை என்கிற உண்மை தெரிய வரும? என ரசிகர்கள் அனைவருமே என்கிற பரபரப்போடு ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல்.  அதேபோல் துளசியை காதலித்த வெற்றியும், அடுத்தடுத்து என்னென்ன என்ன பிரச்சனை செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

முத்து மணியால் செய்த... அழகிய வெள்ளை நிற லெஹங்காவில் அசரவைக்கும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

57

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் இரு பிரபலங்களுக்கு அடுத்தடுத்து வெவேறு விபத்துகளில் சிக்கியுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'வானதைப்போல' சீரியலில் சின்ராசுவின் மாமா முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இயக்குனர் மனோஜ் குமார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இவர், கடந்த மார்ச் 31ம் தேதி காலை தன்னுடைய காரில், மனைவி செல்வி மற்றும் உதவியாளர் ரகுபதி என்பவருடன் இணைந்து தேனிக்கு புறப்பட்டுள்ளார். இவர்களுடைய கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

67

இந்த விபத்தில் பயணம் செய்த மூன்று பேருக்கும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அருகே இருந்தவர்கள் மூவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

சில இரவுகளில்... என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

77

அதேபோல் 'வானத்தைப்போல' சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹீரோ ஸ்ரீகுமார் தீ விபத்தில் சிக்கி உள்ளார். சென்னை பாண்டி பஜாரில் சமீபத்தில் வணிக வளாகத்தில் நடந்த திடீர் தீ விபத்தின் போது நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த வணிக வளாகத்தின் உள்ளே இருந்ததாகவும், அப்போது விபத்தில் சிக்கிய 70 நபர்களில் நடிகர் ஸ்ரீகுமாரும் ஒருவர் என கூறப்படுகிறது. எனினும் பெரிதாக எவ்வித அசம்பாவிதமும் நேராமல் அனைவருமே பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories