'ஏஜ் இஸ் ஜஸ்ட் ஏ நம்பர்', என்பதை தன்னுடைய பல பாடல்களில் நிரூபித்தவர் தான் கவிஞர் வாலி. குறிப்பாக சுமார் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய வாலி, காலத்திற்கு ஏற்ற போல், தன்னுடைய பாடல் வரிகளை அப்டேட் செய்தவர். 80 வயதில் கூட இவர் எழுதிய பல பாடல்கள் இளம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தன. இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் முதல் கொண்டு பல முன்னணி இயக்குனர்கள் இவர் தங்களின் படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என, ஒரு மாதம் கூட காத்திருந்து இவரிடம் பாடல்களை வாங்கியுள்ளனர்.