தங்கள் தரிசனம் கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி

Published : Mar 20, 2023, 02:26 PM IST

பொன்னியின் செல்வன் 2 படத்தின் அக நக பாடல் இன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷாவும், கார்த்தியும் தற்போது டுவிட்டரில் chat செய்துள்ளனர்.

PREV
14
தங்கள் தரிசனம்  கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி

மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதில் முதல் பாகத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24

அதற்கான அப்டேட்டுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன. முதலாவதாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அக நக என்கிற பாடலை இன்று மாலை வெளியிட உள்ளனர். இது இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவுக்கும், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாகும். இந்த பாடல் ரிலீஸ் ஆவதை புரமோட் செய்யும் விதமாக திரிஷாவும், கார்த்தியும் தற்போது டுவிட்டரில் chat செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

34

முதலில் கார்த்தி ‘இளையபிராட்டி…ஹாய்’ என டுவிட் செய்ய, இதற்கு நெடுநேரமாக திரிஷா பதிலளிக்காமல் இருந்து வந்தார். பின்னர் பொறுமையை இழந்த கார்த்தி, ‘என்ன பதிலே இல்லை’ என மற்றொரு டுவிட்டை போட்டார். இதையடுத்து ஆன்லைன் வந்த திரிஷா, ‘என்ன வாணர்குல இளவரசே?' என கேள்வி கேட்க, இதற்கு ‘தங்கள் தரிசனம்  கிடைக்குமா?’ என்று பதில் கேள்வி கேட்டிருந்தார் கார்த்தி.

44

இதையடுத்து, ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்' என கார்த்தியின் டுவிட்டுக்கு ரிப்ளை செய்திருந்தார் திரிஷா. உடனே சுதாரித்துக் கொண்ட கார்த்தி, ‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’ என வந்தியத்தேவனாக மாறி ஒரு கேள்வியை கேட்டார். 

இதற்கு ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா?’ என திரிஷா ரிப்ளை கொடுக்க, கார்த்தி பதிலுக்கு ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….’ எனக்கூறினார். இப்படி குந்தையாகவும், வந்தியத்தேவனாகவும் மாறி திரிஷாவும், கார்த்தியும் உரையாடிக்கொண்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories