கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் படங்களில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். கே.ஜி.எஃப் படங்களுக்கு பின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன கோப்ரா படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி.
இப்படி நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில், அவரையும் யாஷையும் பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. அது என்னவென்றால், கே.ஜி.எஃப் படத்தில் நடித்தபோது நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதன் காரணமாக இனிமேல் அவருடன் நடிக்கவே கூடாது என ஸ்ரீநிதி ஷெட்டி முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.
இதுகுறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : “தவறான தகவல்களை பரப்புவதற்காகவே சிலர் சோசியல் மீடியாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நான், அன்பையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த அதை பயன்படுத்துகிறேன். ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கே.ஜி.எஃப் உலகத்தில் பணியாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன், நல்ல நண்பர் மற்றும் என்னை ஊக்குவிப்பவர். எப்போதும் நான் அவரது ரசிகை தான்” என பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரீநிதி.
இதையும் படியுங்கள்... Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா