மேலும் அனைத்து மாணவர்களுக்கும், தன்னுடைய கைகளாலேயே பரிசு வழங்கினார் தளபதி விஜய். அதற்கு முன்னதாக மாணவர்களிடம் பேசும் போது, அதிகம் படிப்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. பெரியார், அம்பேத்கர், காமராஜர், ஆகியோர் பற்றி ஒவ்வொரு மாணவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பை விட ஒவ்வொரு மாணவ - மாணவிக்கும் அவர்களுடைய கேரக்டரும், சிந்திக்கும் திறனும் தான் உண்மையான கல்வி என கூறினார். அதைப்போல் அசுரன் படத்தில் வரும் வசனத்தை கூறி, காடு இருந்தா புடுங்கிப்பானுங்க, பணம் இருந்தா எடுத்துப்பானுங்க ஆனா படிப்ப மட்டும் யாராலயும் எடுத்துக்க முடியாது என்று கூறி , படிப்பு என்பது எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதை கூறினார்.
உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!