தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய அவர், அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டை இன்று விக்கிரவாண்டியில் நடத்தினார். இதுவரை ஆடியோ லாஞ்சில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய், முதன்முறையாக ஒரு முழுநேர அரசியல் தலைவனாக மாறியபின்னர் கலந்துகொண்ட முதல் மாநாடு என்பதால் இதில் விஜய்யின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கில் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர்.