
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தளபதி விஜயை வைத்து, முதல் முறையாக "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. அவருக்கே உரித்தான பல சிறப்பான Goosebumps வரவழைக்கும் காட்சிகளை இந்த "கோட்" படத்தில் அவர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் தனது கலை உலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒரு அரசியல் தலைவராக தனது பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் விஜய்க்கு, பிரியா விடை கொடுக்கும் வண்ணம் ஒரு சிறப்பான படத்தை தளபதியின் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
படம் துவங்கியதில் இருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை, ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்திருக்கும் வெங்கட் பிரபு, இயக்குனராக மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் பிரபல நடிகை திரிஷா உள்ளிட்டோரின் கேமியோ காட்சிகள் திரையரங்குகளில் உச்சகட்ட கர ஒளியை பெற தவறவில்லை. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக பெரிய அளவில் இப்படத்திற்கு பில்டப் கொடுக்கப்பட்டது.
எங்கு அவையெல்லாம் வீணாகி விடுமோ என்று ரசிகர்கள் அஞ்சிய நிலையில், அது ஒரு சதவீதம் கூட வீணாகாமல் சொல்லி அடிக்கும் கில்லியாக மாறி இருக்கிறது தளபதியின் கோட் திரைப்படம். தனக்கு கிடைத்த முதலும் கடைசியுமான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு, தளபதி விஜயை மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தில் இயக்கி இருக்கிறார் VP.
ராதிகாவுக்கு இந்த அசிங்கம் தேவையா? ஃபேக் பயரான விவகாரம்.. பங்கம் பண்ணிய பயில்வான்!
இது ஒரு புறம் இருக்க, தளபதிக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் தல அஜித்தை வைத்து தரமான சம்பவம் ஒன்றை செய்திருந்தார் வெங்கட் பிரபு. அது தான் "மங்காத்தா" என்கின்ற திரைப்படம். இன்றைய காலகட்டத்தில் தல அஜித் ரசிகர்களினுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பே அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது தான்.
இதுகுறித்து பேசிய வெங்கட் பிரபு, அதற்கான சாத்திய கூறுகள் நிறையவே இருக்கிறது. ஆனால் தல இப்போது பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனக்கென சொந்தமாக ஒரு பைக் கம்பெனியையும் அவர் இப்போது நடத்தி வருவதால், அவர் ஓகே சொன்ன மறுநிமிடமே மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தொடங்கும் என்று வாக்களித்திருக்கிறார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான "மங்காதா" திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய ஹிட்டாக மாறியது. தல அஜித்தின் திரை வரலாற்றிலேயே அவருடைய ரசிகர்களால் அதிக அளவில் விரும்பப்பட்ட படங்களில் மங்காத்தா திரைப்படம் ஒன்று.
இப்படி போட்டி போட்டுக்கொண்டு தல மற்றும் தளபதி ஆகிய இருவருக்கும் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு, தங்களுடைய அபிமான நாயகர்களுக்கு மட்டும் பிளாப் படத்தை கொடுத்துவிட்டதாக இப்பொழுது இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இரு நடிகர்களின் விசிறிகள்.
கடந்த 2013ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகத் தொடங்கிய திரைப்படம் தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வழங்கிய "பிரியாணி". இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படமாக விளங்கியது. யுவன் சங்கர் ராஜாவின் 100வது திரைப்படமாக உருவாகியிருந்தாலும், பிரியாணி உலக அளவில் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. ஆனால் போட்ட பணத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு திரும்ப எடுத்துக் கொடுத்து தப்பித்துக் கொண்டது.
ஆனால் இந்த படத்தில் கார்த்தியின் நடிப்பில் உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை, அவருடைய கோவா, சென்னை 28, மங்காத்தா போல ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது மாறவில்லை. அதற்கு பிறகு இந்த கூட்டணியில் எந்த படமும் வெளியாகவுமில்லை. இப்பொது கோட் படமும் சூப்பர் ஹிட்டாகி வருவதால், உச்சகட்ட காண்டில் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகின்றனர் நம்ம கார்த்தியின் ரசிகர்கள். அட கவலைய விடுங்க, லோக்கி கைதி 2 பட கதையோடு காத்திருக்கிறார் என்று தான் அவர்களுக்கு சமாதானம் சொல்ல வேண்டும்.
கடந்த 2015ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மாசு என்கிற மாசிலாமணி". முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம், ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காமெடிக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு பல காட்சிகள் என்று அமைக்கப்பட்டிருந்தாலும், மாசு திரைப்படம் எதிர்பார்த்த அளவு பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை. சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் 78 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது.
ஏற்கனவே அஞ்சான் பட விரக்தியில் இருந்த சூர்யாவிற்கு, வெங்கட் பிரபுவின் மாசு படமாவது கைகொடுக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், அதுவும் காலை வாரியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மாசு திரைப்படம் Fantasy மற்றும் காமெடி திரைப்பட விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதையும் நாம் மறந்துவிட கூடாது.
அதன் பிறகு இன்னும் ஒரு சரியான படத்தில் சூர்யாவும், வெங்கட் பிரபுவும் இணையாமல் இருந்து வருகின்றார். ஆனால் இந்த பத்து ஆண்டுகளில் சூரியாவின் லெவல் வேறொரு தளத்திற்கு சென்றுவிட்டது. அவருடைய கங்குவா தான் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக மாறியுள்ளது.
என்னது ஒரு படம் 3 வருஷம் ஓடுச்சா! தியேட்டரில் அதிக நாள் ஓடிய மாஸ்டர் பீஸ் தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ