பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் 'பாகுபலி'. இந்த படத்திற்குப் பிறகு பிரபாஸ் தென்னிந்தியாவில் அறியப்பட்ட நடிகர்களில் முன்னணியில் உள்ளார். இரண்டு பாகங்களை தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் சாஹோ ஓரளவு வெற்றியை கண்டது. இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.