அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏற்கனவே சூர்யாவை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில், தனது 170வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த திரைப்படத்திற்கு "வேட்டையன்" என்று பெயரிடப்பட்டது. இப்படத்தின் மூலம், முதல் முறையாக பிரபல நடிகர் அமிதாபச்சன் தமிழ் திரை உலகில் அறிமுகமாகும் நிலையில், பாஹத் பாசில், ராணா தகுபதி, துஷாரா மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.