தமிழ் சினிமாவில், பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயாவிற்கு பிறகு புன்னகை அரசி என்கிற பெயரை தனதாக்கி கொண்டவர் நடிகை சினேகா. பார்ப்பதற்கு, பக்கத்து வீட்டு பெண் போல்... எதார்த்தமான அழகு, குறுகுறு கண்கள், முத்து சிதறும் சிரிப்பு.. என, அறிமுகமான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்தார் சினேகா.