இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த பின்னர், மூன்றாவது படமான நியூ படத்தை தானே இயக்கிய அதில் ஹீரோவாகவும் நடித்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு, சைன்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்ட இந்த படம், சில சர்ச்சைகளை சந்தித்தாலும், ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கி நடித்த படங்கள், தொடர் தோல்வியை தழுவியதால் சில காலம் திரையுலகில் அதிகம் தலை காட்டாமல் இருந்த எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.