சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்த ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பட யானை - பலரும் அறிந்திடாத தகவல்

Published : Mar 15, 2023, 12:15 PM IST

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய யானை ரகு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள், அவரின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

PREV
14
சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்த ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பட யானை - பலரும் அறிந்திடாத தகவல்

கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் இதுவாகும். இந்த ஆவணப்படம் ஊட்டி அருகே உள்ள முதுமலையில் தான் படமாக்கப்பட்டது. அங்கு ரகு, அம்மு என்கிற இரண்டு யானைகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு, இன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

24

இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு யானைகளில் ரகு என்கிற யானை ஓசூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு மீட்கப்பட்டது. தாய் யானையை பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்தக் காயங்களுடன் சுற்றிந்திரிந்த இந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது உடல்நலம் குன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யானை ரகுவை காப்பற்ற காஸ்ட்லியான மருந்துகள் தேவைப்பட்டு இருந்ததாம்.

இதையும் படியுங்கள்... ஆர்.ஆர்.ஆர் முதல் தி வேல் வரை... ஆஸ்கர் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ

34

அந்த சமயத்தில் இதுகுறித்த தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அந்த யானையின் மருத்துவ தேவைகளுக்காக உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். அதோடு பிரபல ஜோதிடன் ஷெல்வியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தாராம். இதையடுத்து தான் படிப்படியாக உடல்நலம் தேறி இயல்புநிலைக்கு திரும்பியதாம் ரகு. இந்த தகவலை ஊட்டியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார். 

44

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய யானை ரகு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள், அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விலங்குகள் மீது பிரியம் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கண்ணை நம்பாதே முதல் வாத்தி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories