இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த சில ஆண்டுகளாக எந்தபடத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அவர் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதன்படி கடந்தாண்டு இவர் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.