நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளிவிழா ஒன்றில் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தியது மட்டும் இன்றி, வந்ததுமே மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் மிகவும் பரபரப்பாக பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், குடும்பம், ரசிகர்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
26
அந்த வகையில், மைதிரி-எனும் நட்பு திருவிழா நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்திகேயன், மற்றும் நடிகை யாஷிகா ஆகியோர் கலந்துகொண்டார்.
இவர்கள் இருவருக்குமே மாணவர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்ததால், குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
46
எனவே வந்ததுமே மிகவும் அன்பாக மாணவர்கள் அனைவரிடமும், தாமதமாக வந்ததற்காக முதலில் மன்னிப்பு கேட்டார். போக்குவரத்து நெரிசல்காரனமாக தாமதமாகிவிட்டது என்று காரணமும் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய அவர் காலை முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மிகவும் சோர்வாக வந்தேன். உங்களை பார்த்த பின்னர் புது எனர்ஜி வந்து விட்டது என தெரிவித்தார்.
66
மேடையில் பேசிய பின்னர் மாணவர்களை திருப்திபடுத்த, மேடையில் இருந்தபடி தன் மொபைலில் செல்பி எடுத்து அசத்தினார். மாணவர்களும் சிவகார்த்திகேயன் மற்றும் யாஷிகாவை பார்த்து உற்சாகம் அடைந்தது மட்டும் இன்றி, அன்பை பொழிந்தனர். மேலும் சிவகார்த்திகேயன், உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என பேசினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.