'சந்திரமுகி' படத்தில் வடிவேலுவின் மனைவியாக சுவர்ணா என்கிற தன்னுடைய நிஜ பெயரில் நடித்திருந்த நடிகை தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இவரது லேட்டஸ்ட் ஷாக்கிங் போட்டோஸ் இதோ...
கேரளாவை சேர்ந்த சுவர்ணா, 1992 ஆம் ஆண்டிற்கான மிஸ் கேரளா என்கிற பட்டத்தை தட்டி சென்றவர். அழகி பட்டத்தை இவர் பெற்ற பின்னர், சில மலையாள பட வாய்ப்புகள் இவரை தேடி வர துவங்கியது.
29
அந்த வகையில், ஹீரோயினாக அவரால் நிலைக்க முடியாவிட்டாலும் மோகன்லால், மாமூட்டி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தை தாண்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம், சந்திரமுகி, திருப்பதி, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்கள் ஆகும்.
49
அழகும், திறமையும் கொண்ட பப்லி பப்லி நடிகையாக வலம் வந்த சுவர்ணா... கடைசியாக தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'நீயும் நானும்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி, 10க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் தமிழில், 'தேன்மொழியால்', 'மாயா மச்சீந்திரா', 'சதுரங்கம்' போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
69
இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வர்கீஸ் ஜாக்கோப் என்பவரை திருமணம் செய்து கொண்ட சொர்ணா... தற்போது வெளிநாட்டில் கணவர் மற்றும் தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார்.
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த போது பளபளக்கும் அழகில், அழகு பதுமை போல் இருந்த... சொர்ணா தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
89
கன்னங்கள் ஒட்டி போய்... உடல் மெலிந்து காணப்படுகிறார். இவர் தன்னுடைய லேட்டஸ்ட் பபுகைப்படங்களை... இன்ஸ்டாராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் சந்திரமுகி சொர்ணாவா இது என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சொர்ணா மீண்டும் நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.