ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான 'பதான்' திரைப்படம், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'பதான்' முதல் நாளிலேயே, இந்தியாவில் மட்டும் 54 கோடி வசூல் செய்த நிலையில், உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
27
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து... கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாலிவுட் பாஷாவான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில், ரசிகர்களின் மிகப்பெரிய காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் ஜனவரி 25 (நேற்று) 'பதான்' திரைப்படம் வெளியானது.
இந்த படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் வழக்கம்போல், ஆட்டம், பாட்டம், என திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் அதிகாலை முதலே பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
47
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, தொடர்ந்து 'பதான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே போல் இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்துக்கு நிராகராக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
'பதான்' திரைப்படம் வெளியான முதல் நாளே, இந்திய அளவில் சுமார் 54 கோடி வசூல் செய்தகாக கூறப்பட்ட நிலையில், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
67
மேலும் இன்று குடியரசு தினம் என்பதால் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும், இரண்டே நாட்களில் பதன் இந்தியாவில் மட்டுமே 'பதான்' திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கும் என சினிமா வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இப்படம் டிக்கெட் முன்பதிவிலும் KGF படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிபிடித்தக்கது.