இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் வெற்றிமாறனையும் புகழ்ந்து பேசினார். அதில் அவர் பேசியதாவது : “பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் இருந்தனர். அந்த வரிசையில் ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் சிறந்த படங்களை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.