யாரை கேட்டு இங்க வந்த? சாச்சனா நேமிதாசுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை கொடுத்து உள்ளே அனுப்பிய விஜய் சேதுபதி!

First Published Oct 6, 2024, 7:32 PM IST

பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார் 'மகாராஜா' பட நடிகை சாச்சனா நேமிதாஸ். இவரை யார் மற்றும் உள்ளே வந்ததன் காரணம் குறித்து பார்ப்போம்.
 

Bigg Boss Season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சற்று முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது. ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி இருந்தாலும், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார் விஜய் சேதுபதி.

முதல் போட்டியாளராக, பிரபல போட்டியாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்ற நிலையில்.. இரண்டாவது போட்டியாளராக சாச்சனா நேமிதாஸ் உள்ளே சென்றுள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக சாச்சனா நேமிதாசின் எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.

Vijay sethupathi

குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்துள்ள சாச்சனா நேமிதாஸ் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் தெரிவித்துள்ளார். புரோமோவில்.. தன்னை பற்றி பேசியுள்ள சாச்சனா நேமிதாஸ் "எங்க அம்மா ராணி மாதிரி. அவங்க ஆசை பட்ட வாழ்க்கைக்காக நிறைய போராடி இருக்காங்க அவங்க ஆசைக்காக தான் நான் சினிமாவின் உள்ளே வந்தேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்டிக்கொண்டே பல பட்டாசுகளை கொளுத்தி போட்ட விஜய் சேதுபதி!

Latest Videos


Sachana Namidass

தொடர்ந்து பேசிய சாச்சனா நேமிதாஸ், எங்க வீட்டுல, நான், அப்பா, அப்பா எனக்கு 2 அக்கா. என்னை பார்க்க ஸ்கூல் பொண்ணு போல் இருக்குனு சொல்லுவாங்க. ஆனால் எனக்கு 21 வயசு ஆகிடுச்சு.  நான் ரொம்ப நாட்டி அண்ட் ஜாலி பர்சன். மீடியாவுக்குள் வந்தது அம்மாவின் ஆசைக்காக தான். அப்போ அவங்க அப்பா பர்மிஷன் கொடுக்கல, ஆனால் எங்க அப்பா எனக்கு அனுமதி கொடுத்ததால்... நான் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற சினிமாவுக்குள் வந்தேன். 
 

Sachana Namidass Entry:

அம்மாவுக்காக மகாராஜா படத்தில் நடித்திருந்தாலும், இப்போது எனக்கும் சினிமா மீது ஆர்வம் வந்து விட்டது. எனவே சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை எட்ட பிக்பாஸ் எனக்கு உதவும் என கூறியுள்ளார். பின்னர் சாச்சனாவிடம் விஜய் சேதுபதி பேசும் போது.. யாரை கேட்டு நீ எங்க வந்த என உரிமையாக கேள்வி எழுப்பி, பின்னர்... உன்னிடம் மிகவும் சகஜமாக பேசியுள்ளேன் அதனால் என்ன பேசுவது என எனக்கு தெரியவில்லை என கூற, நீ தைரியமாக விளையாட வாழ்த்துக்கள் என கூறினார். சாச்சனாவும் ஓகே அப்பா என கூறியதும்... உனக்கு என்னை அப்பான்னு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிடணும்னா அப்படியே கூப்பிடு என ஸ்பெஷல் சலுகை கொடுத்து நான் சில சமயங்களில் ஸ்ட்ரிக்ட்டாக பேசினால் எதுவும் நினைக்காதே என வாழ்த்து உள்ளே அனுப்பி வைத்தார்.

Bigg Boss Tamil : பிக் பாஸை பங்கமாய் விமர்சித்த ரவீந்திரன் - முதல் போட்டியாளராக "வாரி" வரவேற்ற சேதுபதி!
 

click me!