கரணின் கெரியர் காலி ஆனதற்கு காரணம் ‘அந்த’ ஆன்ட்டி தானா? உண்மையை போட்டுடைத்த பிரபலம்

Published : Mar 24, 2025, 11:42 AM ISTUpdated : Mar 24, 2025, 11:57 AM IST

நடிகர் கரணின் சினிமா கெரியர் மளமளவென சரிந்ததற்கு ஒரு ஆன்ட்டி தான் காரணம் என கூறப்படும் நிலையில், அதன் பின்னணியை கூறி உள்ளார் சபிதா ஜோசப்.

PREV
14
கரணின் கெரியர் காலி ஆனதற்கு காரணம் ‘அந்த’ ஆன்ட்டி தானா? உண்மையை போட்டுடைத்த பிரபலம்

Sabitha Joseph Says about Actor Karan : நடிகர் கரணின் மார்க்கெட் சரிவை சந்தித்ததற்கு காரணங்கள் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளார். அவர் பேட்டியில், கரண் தனது பாதையில் தவறான முடிவுகள் எடுத்ததன் காரணமாக பட வாய்ப்புகளை இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கரண் வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகளை தவிர்த்து, ஹீரோவாக நடிக்க விரும்பியதால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது என்று சபிதா ஜோசப் பேசியுள்ளார்.

24
Actor Karan

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சபிதா ஜோசப் கூறியதாவது : "கரணின் உண்மையான பெயர் ரகு. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கமலின் 'நம்மவர்' படத்தில் வில்லனாக நடித்தபோது, அவரது வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னர், 'கணணெதிரே தோன்றினாள்' மற்றும் 'லவ் டுடே' போன்ற படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். நடிகர் கரண் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி சில படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்தார். 

இதையும் படியுங்கள்... ‘நீ நடிக்கவே வேண்டாம் கிளம்புடா’ வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட கதை தெரியுமா?

34
Karan Cinema Carrier

அப்போது, அவரது மேனேஜராக பணியாற்றிய லட்சுமி என்பவர் அவரது கம்பெனியில் பல பொறுப்புகளை கவனித்துள்ளார். கரணின் சம்பளம் மற்றும் கால்ஷீட் விவகாரங்கள் அனைத்தையும் லட்சுமி தான் பார்த்து வந்துள்ளார். சினிமாவில் கரணுக்கு வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், அவர் ஹீரோவாக நடிக்க விரும்பினார். இதன் விளைவாக, வில்லன் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும், அவருக்கு ஹீரோவாக நடிக்கவே விரும்பியதால் தான் அவருக்கு வாய்ப்பு குறைந்தது என சபிதா ஜோசப் கூறினார்.

44
Actor Karan Manager

மேலும் ஒரு முறை கரணின் மேனேஜராக இருந்த லட்சுமி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும், இதுபற்றி மெளனம் ரவி தன்னிடம் சொன்னதும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னாராம் சபிதா ஜோசப். அப்போது கரண் முன்பை போல் தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவரிடம் யாரோ தன்னைப்பற்றி தவறாக கூறி உள்ளதாக கூறி புலம்பி இருக்கிறார் லட்சுமி. ஒரு நடிகருக்கு மேனேஜராக இருப்பதால் இப்படியெல்லாம் பேச தான் செய்வார்கள் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார் சபிதா ஜோசப்.  லட்சுமியால் கரணுக்கு சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர்... எம்.ஜி.ஆர் பற்றி ஜெயலலிதா அளித்த பிளாஷ்பேக் பேட்டி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories