Suriya 41 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யா - பாலா இடையே மோதலா?... தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?

First Published May 4, 2022, 11:31 AM IST

Suriya 41 : சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட தாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா தற்போது 3-வது முறையாக இணைந்துள்ள படம் சூர்யா 41. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதமாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. அதில் நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வந்தனர். ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கோபமடைந்த நடிகர் சூர்யா படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது பாதியிலேயே வெளியேறியதால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்ட தாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது சூர்யா 41 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி, சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததன் காரணமாக தான் நடிகர் சூர்யா சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வருகிற ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிக தொகை கொடுத்து ‘கே.ஜி.எஃப் 2’ டிஜிட்டல் உரிமையை தட்டித்தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்

click me!