1985-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அந்த சமயத்தில் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கிசுகிசுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் அந்த காலகட்டத்தில் திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்ட நடிகை என்றால் அது ராதிகா தான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.