இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும், விளையாட்டு விபரீதமாக மாறியுள்ளது. நடிகர் நாகேஷ் தன்னுடைய மகன் ஆனந்தபாபுவை வைத்து 1985 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆனந்த பாபு ஜோடியாக நடித்திருந்தார்.
அப்போது பொம்மை துப்பாக்கியில் ஈயத்தால் செய்யப்பட்ட புல்லட்டை கொண்டு இருவரும் சுட்டு.. சுட்டு... விளையாடிக் கொண்டிருந்தனர். ரம்யா கிருஷ்ணனுடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்த அவரது தாயார், கே.எஸ்.ரவிக்குமாரிடம் தன்னுடைய கையை சரியாக குறி பார்த்து சுடும்படி கூறியுள்ளார். அவரும் ஜாலியாக குறி பார்த்து சுட, குறித்த தவறி அவரது தோள்பட்டையில் அந்த விளையாட்டு துப்பாக்கியில் போடப்பட்ட குண்டு பாய்ந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசாரும் அப்போது அவருடைய வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரம்யா கிருஷ்ணனின் தாயார் இது விளையாட்டாக நடந்த சம்பவமே தவிர, இதில் எது உள்நோக்கமும் இல்லை என தெளிவுபடுத்திய பின்னர் போலீசார் இந்த விவகாரத்தை கைவிட்டுள்ளனர்.