அதற்கான அறிவு இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கத்தியவர்கள் அவர்களின் கலாசாரம், சம்பிரதாயத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி, இந்தியாவின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள். ஆகவே, நம்முடைய பாரத நாட்டின் மகத்தான கலாசாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும். இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என் கூறியுள்ளார்.