ராஷ்மிகா முதன் முதலில் திரைப்பயணம் என்பது பல சவால்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே உள்ளது. ஆன்லைனில் ட்ரோல் செய்யப்பட்டது தொடங்கி இன்று பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளார் ராஷ்மிகா. அவரின் திரைப்பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா. தனது நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார். அவர் ஏற்று நடித்திருந்த சான்வி ஜோசப் கதாப்பாத்திரத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனால் அவர் ஓவர் நைட்டில் ஸ்டாராக மாறினார். ரசிகர்கள் அவரை நேஷனல் க்ரஷ் என்று அழைக்கின்றனர்..
பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில் படிக்கும் போது, ராஷ்மிகா மந்தனா பல அழகுப் போட்டிகளில் பங்கேற்றார். இதன் மூலம் அவருக்கு மாடலிங்கில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அப்போது தான் அவர் ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டியின் கண்களில் பட்டுள்ளார். இதை தொடர்ந்து தான் அவருக்கு கிரிக் பார்ட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புதுமுக நடிகையாக இருந்தாலும் முதல் படமே, அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் அவரு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் அஞ்சனி புத்ரா (2017) மற்றும் கணேஷ் சமக் (2017) ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.