பிரியா பவானி ஷங்கர் முதல் திவ்யா துரைசாமி வரை; செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய 5 பிரபலங்கள்!

First Published Oct 22, 2024, 11:59 AM IST

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகையாக மாறிய சில பிரபலங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

Fathima Babu

பாத்திமா பாபு:

செய்தி வாசிப்பாளராக இருந்து, நடிகையாக மாறியவர்களில் ஒருவர் பாத்திமா பாபு. 1980 மற்றும் 1990-க்கு இடைப்பட்ட காலத்தில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கெரியரை துவங்கியவர் பாத்திமா. பின்னர் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு, இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பெண்ணியத் திரைப்படமான 'கல்கி' படத்தில் 1996 ஆம் ஆண்டு, நாயகிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

'கல்கி' திரைப்படம் பாத்திமா பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மனைவிகளில் ஒருவராக பாத்திமா நடித்திருந்தார். இதன் பின்னர் பாசமுள்ள பாண்டியரே, விஐபி, நேருக்கு நேர், உளவுத்துறை, துள்ளி திரிந்த காலம், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியலில் வலுவான கதாபாத்திரங்கள் அமைந்ததால் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் இவரது கவனம் சென்றது. இதுவரை 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ள பாத்திமா பாபு தற்போது 'ஜானகி ராமையா காரி மணவாளு' என்கிற தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்.
 

Priya Bhavani Shankar

பிரியா பவானி சங்கர்:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார். பின்னர் ஜோடி நம்பர் ஒன், ஃபிலிம் பேர் அவார்ட்ஸ் சவுத், சூப்பர் சிங்கர் 5, கிங் ஆப் டான்ஸ், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ப்ரியா பவானி ஷங்கர், அதிரடியாக 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இதன் பின்னர் ப்ரியா பவானி ஷங்கர் தேர்வு செய்து நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மண பெண்ணே, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம், ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான, டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஜீப்ரா என்கிற தெலுங்கு திரைப்படத்திலும், இந்தியன் 3 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக மாறிய நடிகைகளில் மிக முக்கியமானவர் பிரியா பவானி சங்கர்.

1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!
 

Latest Videos


Saranya Turadi

சரண்யா துராடி:

தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்' பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலில் நடித்துவரும் சரண்யா துராடி, தன்னுடைய கெரியரை செய்தி வாசிப்பாளராக துவங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராகவும், செய்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சரண்யாவுக்கு, அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தில் நடித்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், நெஞ்சம் மறப்பதில்லை என்கிற சீரியலில் நடிக்க துவங்கினார். இதைத் தொடர்ந்து ரன், ஆயுத எழுத்து, போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா திருமணத்திற்கு பின்னர் சீரியலில் இருந்து விலகியே இருந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் தங்கமயிலாக நடித்து வருகிறார்.
 

Divya Duraisamy

திவ்யா துரைசாமி:

செய்தி வாசிப்பாளராக இருந்து, தற்போது சென்சேஷனல் நாயகியாக மாறி உள்ளவர் திவ்யா துரைசாமி. 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா துரைசாமி,  இதை தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான 'சஞ்சீவன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிய திவ்யா துரைசாமி,  ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் வலுவான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் மற்றும் சமீபத்தில் வெளியான வாழை ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினி முதல் தனுஷ் வரை; அசிங்கப்படுத்தியவர் முன்பு வளர்ந்து தரமான ரிவெஞ் கொடுத்த 3 பிரபலங்கள்!

Anitha Sampath

அனிதா சம்பத்:

அனிதா சம்பத் தமிழில் மூன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். சர்க்கார், காப்பான், எந்திரன் 2, போன்ற திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளர் கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. தர்பார், இரும்பு மனிதன், டோனி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் தலைகாட்டிய அனிதா சம்பத், தற்போது சீரியலில் கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். இவர் சினேகனுக்கு ஜோடியாக பவித்ரா என்கிற தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!