பொன்னியின் செல்வன் பட பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

First Published Sep 2, 2022, 7:50 AM IST

singer bamba bakya : தமிழில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களில் பாடிய பாடகர் பம்பா பாக்யா இன்று காலமானார்.

பாடகர் பம்பா பாக்யா காலமானார். அவருக்கு வயது 49. தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அப்படி அவரான் கண்டறியப்பட்ட ஒரு திறமையாளர் தான் பம்பா பாக்யா. பாடகரான இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.

இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய சிம்ட்டங்காரன் பாடல் மூலம் தான். ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் அப்பாடல் இடம்பெற்று இருக்கும். இதன்பின் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எந்திரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய புள்ளினங்காள் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதையும் படியுங்கள்... 2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துபோகும்- அன்றே கணித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

பின்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெறும் காலமே காலமே என்கிற பாடல், இவரது குரலில் வெளியான கவனிக்கத்தக்க பாடல் ஆகும். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டாகி உள்ளது.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாடகர் பம்பா பாக்யா இன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 49. பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

click me!