கல்கி எழுதிய, பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து, தற்போது இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக, 5 மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 1'. சுமார் மூன்று வருடங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்த நிலையில், ஒருவழியாக முதல் பாகத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து, செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.