Published : Sep 01, 2022, 08:11 PM ISTUpdated : Sep 01, 2022, 08:23 PM IST
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோருக்கு இன்று திருமணம் நடந்துள்ள நிலையில், மஹாலஷ்மி தன்னுடைய முதல் கணவர் பற்றிய தகவல் வெளியாகியுளளது.
சீரியல் நடிகை மஹாலட்சுமி, இன்று திருப்பதியில் திடீர் என, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில், மகாலட்சுமி குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.
26
மேலும் தனது திருமணம் குறித்து புகைப்படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, மஹாலக்ஷ்மி ஏன் முதல் கணவரை பிரிந்தார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மஹாலட்சுமி அனில் குமார் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா - அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார்.
46
இதை தொடர்ந்து மஹாலட்சுமி தரப்பில் இருந்து, 10 வருடம் ஒன்றாக வாழ்ந்த கணவர் அனில் குமாருக்கு விவாரது நோடீஸ் அனுப்பினார். ஆனால் மகாலட்சுமியின் கணவர் அனைத்து பிரச்னையும் விரைவில் முடிவுக்கு வந்து விடும், என நினைத்து அவருடன் வாழ தயாராக இருந்தும் கணவரை விட்டு புரிவதில் மஹாலட்சுமி பிடிவாதமாக இருந்தார்.
அதன் பின்னர் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக்காதல் கிசுகிசுவில் சிக்கினார் மஹாலக்ஷ்மி. ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள், வீடியோ, சேட்டிங் போன்றவற்றை வெளியிட்டு பகீர் கிளப்பினார். இதற்க்கு மகாலக்ஷ்மி,ஈஸ்வர் தன்னுடைய நண்பர் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த பிரச்சனை சீரியல் வட்டாரத்தில் ஒரு ப்ரளயத்தையே ஏற்படுத்தியது.
66
பின்னர், ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த மஹாலட்சுமி... தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியலில் நடித்து வருகிறார். கணவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது திடீர் என தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டு, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவரகளது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.