ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

First Published Sep 1, 2022, 8:11 PM IST

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோருக்கு இன்று திருமணம் நடந்துள்ள நிலையில், மஹாலஷ்மி தன்னுடைய முதல் கணவர் பற்றிய தகவல் வெளியாகியுளளது.
 

சீரியல் நடிகை மஹாலட்சுமி, இன்று திருப்பதியில் திடீர் என, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில், மகாலட்சுமி குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

மேலும் தனது திருமணம் குறித்து புகைப்படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
 

இது ஒருபுறம் இருக்க, மஹாலக்ஷ்மி ஏன் முதல் கணவரை பிரிந்தார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மஹாலட்சுமி அனில் குமார் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா - அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார்.

இதை தொடர்ந்து மஹாலட்சுமி தரப்பில் இருந்து, 10 வருடம் ஒன்றாக வாழ்ந்த கணவர் அனில் குமாருக்கு விவாரது நோடீஸ் அனுப்பினார். ஆனால் மகாலட்சுமியின் கணவர் அனைத்து பிரச்னையும் விரைவில் முடிவுக்கு வந்து விடும், என நினைத்து அவருடன் வாழ தயாராக இருந்தும் கணவரை விட்டு புரிவதில் மஹாலட்சுமி பிடிவாதமாக இருந்தார்.

மேலும் செய்திகள்: சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு தயாரிப்பாளர் ரவீந்தருடன் திடீர் என நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் போட்டோஸ்!
 

அதன் பின்னர் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக்காதல் கிசுகிசுவில் சிக்கினார் மஹாலக்ஷ்மி. ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள், வீடியோ, சேட்டிங் போன்றவற்றை வெளியிட்டு பகீர் கிளப்பினார். இதற்க்கு மகாலக்ஷ்மி,ஈஸ்வர் தன்னுடைய நண்பர் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த பிரச்சனை சீரியல் வட்டாரத்தில் ஒரு ப்ரளயத்தையே ஏற்படுத்தியது.

பின்னர், ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த மஹாலட்சுமி... தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே  வா' சீரியலில் நடித்து வருகிறார்.  கணவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது திடீர் என தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டு, அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவரகளது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து குக் வித் கோமாளி புகழ்..! வைரலாகும் திருமண போட்டோஸ்..!
 

click me!