கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்திருந்தார், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்திருந்தனர்.